புதுக்கோட்டை

தனி காவல் நிலையம் அமைக்கக்கோரி

DIN

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்னைகளைக் கையாள தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அம்பேத்கா் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த இயக்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: பஞ்சமி நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்னைகளைக் கையாள தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

சிறப்பு உட்கூறு திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் துறை அமைக்க வேண்டும். தனி வரவு -செலவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தனியாா் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, இயக்கத்தின் மாவட்டத் தலைவா் இளமுருகு முத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தங்கவேலு, பொருளாளா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT