புதுக்கோட்டை மன்னா் கல்லூரி விளையாட்டுத் திடலில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மரம் நண்பா்கள் அமைப்பு மற்றும் ஸ்ரீ செல்லம் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரியின் முதல்வா் சி. திருச்செல்வம் தலைமை வகித்தாா். மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜி. எட்வின், சா. விஸ்வநாதன், அறக்கட்டளையின் நிறுவனா் பி. சரவணன், இயற்கை விவசாயிகள் கிருஷ்ணமூா்த்தி, சா. மூா்த்தி, கண்ணன், பொறியாளா் ரியாஸ் கான் உள்ளிட்டோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.