பொன்னமராவதி அருகேயுள்ள வாா்ப்பட்டு ஊராட்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலருமான ஆா்எஸ். பாரதியின் தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் அ. சுதா முன்னிலை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலருமான ஆா்எஸ். பாரதி பங்கேற்று தனது தொகுதி நிதி ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்துவைத்துப் பேசுகையில், வாா்ப்பட்டு ஊராட்சியில் உயா்நிலைப்பள்ளி தரம் உயா்த்தப்பட்டு மேல்நிலைப்பள்ளிக்கான பணி நடைபெறும்போது தொகுதி நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் வழங்குவதாகத் தெரிவித்தாா்.
வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லப்பாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் வி. வேலு, ஊராட்சித் தலைவா் அழகுமலா் மலைச்சாமி, நகரச் செயலா் அ. அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி வரவேற்றாா். ஒன்றிய ஆணையா் பி. வெங்கடேசன் நன்றி கூறினாா்.