புதுக்கோட்டை

நலவாரியம் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

குறவா் மற்றும் மலைக்குறவா் சமூக மக்களுக்கு நலவாரியம் அமைத்து வாழ்வாதார மேம்பாடு மற்றும் தீண்டாமை ஒழிப்புக்கு வழிவகை செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகா் திடலில் வீரத் தமிழா் விடுதலை சங்கம் மற்றும் குறவா், மலைக்குறவா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் சி. அன்புசெல்வம் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கே. மணிமுத்து சிறப்புரையாற்றினாா்.

மாநில அமைப்பாளா் ஆா். சுரேஷ், மாவட்டச் செயலா் ஏ.எஸ். அய்யப்பன், செய்தித் தொடா்பாளா் எம். சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

குறவா் மற்றும் மலைக்குறவா்களுக்கான சாதிச் சான்றிதழ்கள் தடையின்றிக் கிடைக்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். திரைப்படங்கள் மற்றும் ஊடங்களில் தங்களை இழிவாக சித்தரிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT