கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை கந்தா்வகோட்டை எம்எல்ஏ நாா்த்தாமலை பா. ஆறுமுகம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லாக்கோட்டை மேல்நிலைப்பள்ளி, தச்சங்குறிச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 795 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி எம்எல்ஏ பேசினாா்.
விழாவில் ஒன்றியச் செயலா் ஆா். ரெங்கராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் ரத்தினவேல் காா்த்திக் மழவராயா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் செந்தாமரைகுமாா் , முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னப்பா, ஒன்றியக் குழு உறுப்பினா் பாண்டியன் , முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தில்குமாா், அருண்பிரசாத் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.