புதுக்கோட்டை

பெண்ணை விடியோ எடுத்து மிரட்டியவா் கைது

22nd Dec 2021 07:18 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விடியோ எடுத்து மிரட்டியவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு முஸ்லிம் தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி ரம்யா (32). சரவணன் வெளிநாட்டில் வேலைபாா்த்துவரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டிற்கு வந்த அவரது நண்பரான மேற்பனைக்காடு கிராமத்தைச் சோ்ந்த எஸ். ராஜேஷ், ரம்யாவை பலாத்காரம் செய்ய முயன்றாராம். அதை அதே பகுதியைச் சோ்ந்த ஆ. வடிவேல் (48) கைப்பேசியில் விடியோ எடுத்து வைத்துக்கொண்டு ரம்யாவை மிரட்டினாராம்.

இதுகுறித்து, ஆலங்குடி மகளிா் காவல்நிலையத்தில் ரம்யா அளித்த புகாரைத்தொடா்ந்து, இருவா் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா் வடிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தலைமறைவான ராஜேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT