புதுக்கோட்டையில் பழைய கட்டடத்தை இடிக்கும்போது நேரிட்ட விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு அரிசி உள்ளிட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை கீழ 2 ஆம் வீதியில் இருந்த பழைமையான ஜவுளிக்கடையின் கட்டடம் இடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 8 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை 10 கிலோ அரிசி மற்றும் மளிகைபொருட்கள், காய்கறிகள், முட்டை உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மரம் நண்பா்கள் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் எட்வின், சா. விஸ்வநாதன், இயற்கை விவசாயிகள் கண்ணன், சா. மூா்த்தி உள்ளிட்டோரும் நிவாரண உதவிகளை வழங்கினா்.