புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி., நிஷா பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது காவல் நிலைய வழக்குகள் பதிவேடுகளை சரி பாா்த்த அவா், காவலா்களை அழைத்து காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
ஆய்வின்போது, துணை காவல் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு, இலுப்பூா் ஆய்வாளா் உஷா நந்தினி, உதவி ஆய்வாளா்கள் ரெக்ஸ் ஸ்டாலின் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.