புதுக்கோட்டை

புதுகையில் தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே டிசம்பா் 6- பாபா் மசூதி இடிப்பு தின விழிப்புணா்வு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவா் மு. அப்துல்கனி தலைமை வகித்தாா். கிழக்குமாவட்டப் பொறுப்புக் குழுத் தலைவா் பி. சேக்தாவூதீன் முன்னிலை வகித்தாா்.

மாநிலச் செயலா் இ. அப்துல்ரஹீம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எச். முகமது சாதிக், மாநில விவசாயிகள் அணி துணைச் செயலா் எச். அஜ்மல்கான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலா் தெ. கலைமுரசு, தமிவ்நாடு மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் எம்ஏஜெ. யூசுப்ராஜா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலச் செயலா் எஸ். நியாஸ் அகமது, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT