கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த பிச்சைவேல் மகன் உருமையா (32). கூலித் தொழிலாளியான இவா், கந்தா்வகோட்டைக்கு தனது மோட்டாா் சைக்கிளில் வந்து விட்டு திரும்பும்போது, வடுகப்பட்டி கிராமம் அருகே எதிரே வந்த சரக்கு லாரி எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து உருமையாவின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.