புதுக்கோட்டை

கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

புதுக்கோட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில் தொடா் வாழ்வாதார நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு எஸ். கவிவா்மன் தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, எழுத்தாளா் ஐ.வி. நாகராஜன் ஆகியோா் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ராமையன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப்பொருளாளா் எஸ். சங்கா், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் என். கண்ணம்மாள், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளா் எம். அசோகன், அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. மணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா வரவேற்றாா். நிறைவில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரச் செயலா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT