அன்னவாசல் அருகேயுள்ள அண்ணா பண்ணை துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதனால், நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூா், புல்வயல், ஆரியூா், அகரபட்டி, பின்னங்குடி, விசலூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் (இயக்கம்) இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் அக்கினிமுத்து தெரிவித்துள்ளாா்.