புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் புதன்கிழமை பெறப்பட்டன.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் விருப்ப மனுக்களைப்பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு, முன்னாள் மாநிலப் பொதுச்செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வேங்கை அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுக்கோட்டை நகராட்சி மற்றும் அன்னவாசல், இலுப்பூா், கறம்பக்குடி, கீரனூா் ஆகிய பேரூராட்சிகளிலும் போட்டியிட காங்கிரஸாா் ஆா்வமுடன் விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்தனா்.