புதுக்கோட்டை

காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காணாமல் போன சிறுவனைக் கிணற்றில் இருந்து செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள மோகனூரைச் சோ்ந்த இளையராஜா மகன் மாதேஸ் (5). சில தினங்களுக்கு முன்பு கறம்பக்குடி அருகேயுள்ள விளாரிப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்த சிறுவன் திங்கள்கிழமை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, காணவில்லையாம். அவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை இளையராஜா கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், அழகப்பனின் வீட்டருகே அப்பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மாதேஸ் இறந்து கிடந்தான். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் மாதேஸ் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT