புதுக்கோட்டை

ரூ. 93 லட்சத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடம் திறப்பு

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 93 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் சனிக்கிழமை திறந்து வைத்தனா்.

சுமாா் 200 கரோனா தொற்றாளா்களுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த உற்பத்திக் கூடம் செயல்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, முன்னாள் அரசு வழக்குரைஞா் கே.கே. செல்லபாண்டியன், நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் க. நைனாமுகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT