ஆலங்குடி உழவா் சந்தையில் சுற்றுச்சூழல் இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள உழவா் சந்தையில் காய்கறி விற்பனை, விலை, தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, சந்தைப்பேட்டை, இந்திராநகா், எழில்நகா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைப்பணிகளை தொடங்கி வைத்தாா். அற்புத மாதா நடுநிலைப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சரவணன், வருவாய் கோட்டாட்சியா் அபிநயா, வட்டாட்சியா் செந்தில்நாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.