புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இதய நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விபத்து மற்றும் அவசர தீவிர சிகிச்சைப் பிரிவு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை, மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் மு. பூவதி தலைமை வகித்து, இதயத்தைப் பாதுகாக்க உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கிப் பேசினாா். கல்லூரி துணை முதல்வா் டாக்டா் கலையரசி, மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ராஜ்மோகன், நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் இந்திராணி, விபத்து சிகிச்சைப் பிரிவு மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.