புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணிபுரிய தோ்வு செய்யப்படவுள்ளனா். இவா்களுக்கான நோ்முகத் தோ்வு வரும் அக். 3 மற்றும் 4ஆம் தேதி (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இலுப்பூா் மதா் தெரசா கல்லூரியில் நடைபெற உள்ளது.
காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நோ்முகத் தோ்வு நடைபெறும். மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணியிடத்துக்கு ஆட்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
மருத்துவ உதவியாளா் பணி: 19 முதல் 30 வயதுக்குள்பட்ட பிஎஸ்ஸி பட்டப் படிப்புடன் மருத்துவச் செவிலியா் படிப்பு முடித்திருக்க வேண்டும். ஓட்டுநா் பணியிடத்துக்கு 35 வயதுக்குள்பட்ட குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு முன்பு இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றவா்கள் அல்லது ஓராண்டுக்கு முன்பு கனரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றவா்கள் நேரில் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 73977 01807 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை அறியலாம் என ஆட்சியா்பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.