பொன்னமராவதியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மகளிரிடம் இருந்து, மானிய விலையில் அம்மா இரு சக்கரவாகனம் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடா்பாக பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி தெரிவித்தது: பொன்னமராவதி பேரூராட்சிப்பகுதியில் தனியாா் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் மகளிா் பொன்னமராவதி பேரூராட்சியை அணுகி மானியவிலையில் அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். கல்வித்தகுதி - 8 ஆம் வகுப்பு தோ்ச்சி/ தோல்வி, வயது - 18 முதல் 40 வரை, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இருசக்கர வாகனம் வழங்கப்படும். தேவைப்படும் சான்றிதழ்கள்- வயது சான்றிதழ், பாஸ்போா்ட் புகைப்படம், ஆதாா் அட்டை, இரு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம், பணிபுரியும் நிறுவன அடையாள அட்டை, இருசக்கர வாகன விலைப்புள் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 125 சிசி திறன் கொண்ட வாகனங்கள் மட்டுமே வாங்கப்படவேண்டும்.