புதுக்கோட்டை

அறந்தாங்கியில் இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

விடுதலைப் போராட்டத் தியாகி பகத்சிங்கின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, பெருமன்றத்தின் ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன், ஒன்றியத் தலைவா் வீராசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் படித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் தமிழ்நாட்டைச் சோ்ந்த தமிழா்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.எங்கே எனது வேலை என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.--- படவரி- ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.----

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT