புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாலை 4.30 மணிக்கு சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் வாடிக்கையாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு சமையல் உருளை பயன்படுத்துவோா் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.
கரோனா பொது முடக்கக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், முதல் முறையாக இந்தக் கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.