புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,697 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இருந்து 122 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,845 ஆக உயா்ந்துள்ளது.
4 போ் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 52 வயதுள்ள இரு ஆண்கள், 76 வயதான ஆண், 83 வயதான ஆண் ஆகிய 4 பேரும் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக உயா்ந்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை சனிக்கிழமை பகல் நிலவரப்படி 720 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.