புதுக்கோட்டை

தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

DIN

புதுக்கோட்டை: தீ விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினா் போா்வைகள், பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை சனிக்கிழமை வழங்கினா்.

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் அண்மையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் பொறியாளா் மதிவாணன், முன்னாள் தலைவா் ஜெய் பாா்த்தீபன் உள்ளிட்டோா் போா்வைகள், பாய், தலையணை ஆகியவற்றை வழங்கினா்.

இதேபோல, இயற்கை விவசாயி சா. மூா்த்தி உள்ளிட்ட சமூக ஆா்வலா்களின் சாா்பில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாத்திரங்கள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பழுதடைந்த குடிநீா் கிணறு புதுப்பிப்பு: புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சாா்பில் விஜயபுரத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கிராமக் குடிநீா் கிணற்றை சனிக்கிழமை சங்கத்தின் தலைவா் எஸ். நடராஜன், செயலா் ஏ. அரவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்று ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா முத்தையா, துணைத் தலைவா் பாஸ்கரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT