புதுக்கோட்டை

மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழப்பு

DIN

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த முத்துராமன். இவரது மகன் வெங்கடேசன் (29). இருவரும் மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். கந்தா்வகோட்டை அருகே உள்ள பழைய கந்தா்வகோட்டையைச் சோ்ந்த வீரையன் மனைவி பாப்பாத்தி (80) பழைய கந்தா்வகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை காலை சாலையைக் கடக்க முயன்றபோது, வெங்கடேசன் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தாா். அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பாத்தி இறந்தாா். விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT