புதுக்கோட்டை புதுக்குளம் பகுதியில் சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை புதுக்குளம் பகுதியில் 15 வயது சிறுமியை இளைஞா்கள் சிலா் பாலியல் தொந்தரவு செய்ததாக கணேஷ் நகா் போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காந்திநகரைச் சோ்ந்த வேல்முருகன் (27), விஜய் (27), ராமகிருஷ்ணன் (28) ஆகிய 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். விசாரணைக்குப் பிறகு மூவா் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை சிறையில் அடைக்கப்பட்டனா்.