புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,343 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 95 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,408 ஆக உயா்ந்துள்ளது.
ஒருவா் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 63 வயது ஆண் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதனால் மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 125 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 810 ஆக உள்ளது.