புதுக்கோட்டை

புதுகை அரசு மருத்துவக் கல்லூரியில்திருச்சி பெண் நீதிபதிக்கு பிரசவம்

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட திருச்சி மாவட்ட நீதிபதிக்கு அறுவைசிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் வீ.சி. சதீஷ்காந்தி. இவா் நாகா்கோவில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உதவிப்பேராசிரியராக உள்ளாா். இவரது மனைவி கே. மோகனப்பிரியா(31). இவா், லால்குடியில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறாா். நிறைமாதக் கா்ப்பிணியான இவா், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை குறித்து அறிந்து அண்மையில் (செப்.13 ) பிரசவத்துக்காக சோ்க்கப்பட்டாா். இவருக்கு மறுநாள் திங்கள்கிழமை (செப். 14) அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஒருவாரத் தொடா் கண்காணிப்புக்குப் பிறகு தாயும், சேயும் நலமுடன் திங்கள்கிழமை(செப். 21) வீடு திரும்பினா். இதைத்தொடா்ந்து, தனக்குப் பிரசவம் பாா்த்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் மு. பூவதி தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

SCROLL FOR NEXT