புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,154 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 98 போ் குணமடைந்து, வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,162 ஆக உயா்ந்துள்ளது.
இருவா் சாவு: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அதேபோல, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு ம ற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 868 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.