பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு குடியிருப்பு பகுதியில் இருந்து மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.
பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு பட்டுப்புஞ்சைதோப்பு குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.
வனக்காப்பாளா் வித்யா தலைமையிலான வனத்துறையினா் அங்கு வந்து குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்து வாா்ப்பட்டு காப்புக்காடு வனப்பகுதியில் கொண்டு சென்று அங்கு விடுவித்தனா்.