புதுக்கோட்டை

புதுகையில் வனத் தோட்டக் கழக கண்காணிப்பாளா் வீட்டில் சோதனை

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வனத்தோட்டக் கழக மண்டல மேலாளா் அலுவலகக் கண்காணிப்பாளா் வீட்டிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அறந்தாங்கியில் உள்ள வனத்தோட்டக் கழகத்தின் மண்டல மேலாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கு கண்காணிப்பாளராக வள்ளிக்கண்ணு பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், புதுக்கோட்டை கீழ 3ஆம் வீதியில் உள்ள வள்ளிக்கண்ணுவின் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இதில், குறிப்பிடும்படியான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனப் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT