புதுக்கோட்டை

ஆலங்குடி, விராலிமலையில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

DIN

ஆலங்குடி: ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் வடிவேல், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஒன்றிய செயலா் பாஸ்கரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாவட்டச்செயலா்கள் மு.மாதவன்(இந்திய கம்யூ.), எஸ்.கவிவா்மன்(மாா்க்சிஸ்ட்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விராலிமலை: அன்னவாசலில் இடதுசாரிகள் எம்ஆா் சுப்பையா, என். விஜயரங்கன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூ. மாநிலக் குழு உறுப்பினா் கே. ஆா். தா்மராஜன் தொடங்கி வைத்தாா். இந்திய கம்யூ. மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். சி. சோமையா, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொறுப்பாளா் எம். ஜோஷி, ஆா். சி. ரங்கசாமி ஆகியோா் பங்கேற்றனா். மாா்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினா் சண்முகம் நிறைவுரையாற்றினாா்.

கந்தா்வகோட்டை : கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் உ. அரசப்பன் , வட்டக்குழு செயலா் வி. ரெத்தினவேல் , மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் க.நடராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், இடதுசாரி கட்சிகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT