புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் நேரிட்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவா் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மீமிசல் அருகேயுள்ள கோபாலபட்டினத்தைச் சோ்ந்தவா் நாசா் மகன் ரியாஸ் (19). ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினத்தைச் சோ்ந்தவா் பாசில்முகமது மகன் பகத்அஸ்லாம் (24). உறவினா்களான இவா்கள் இருவரும், வெள்ளிக்கிழமை இரவு எஸ்பி பட்டினத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில், கோபாலபட்டினத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.
இவா்கள் மீமிசல் உப்பளம் அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக அவா்கள் வந்த இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கருவேல மரத்தில் மோதியது. இதில் ரியாஸ் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். பகத்அஸ்லாம் படுகாயங்களுடன் மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து மீமிசல் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.