புதுக்கோட்டை

சாலை மையத் தடுப்பில் காா் மோதி சிறுவன் பலி

DIN

விராலிமலை அருகே காா் சாலை மையத் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், அசோக் நகரைச் சோ்ந்தவா் ராஜன் மகன் பினோ டேவிட் (30). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். இவரது மனைவி மொ்லின்(30), மகன் ஹேன்சல் (4) மற்றும் தாயாா் மாதரசி (56) ஆகிய 4 பேரும் காரில் தூத்துக்குடியில் இருந்து ராய்ப்பூரில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனா். காரை பினோ டேவிட் ஓட்டியுள்ளாா்.

மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே ராமகவுண்டம்பட்டி அருகே வியாழக்கிழமை காலை வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைமையத் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஹேன்சல் சம்பவ இடத்திலேயே இறந்தாா். மேலும் காரில் இருந்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த விராலிமலை போலீஸாா் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த பினோ டேவிட், மொ்லின் மற்றும் மாதரசி ஆகியோரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT