புதுக்கோட்டை

வாா்டு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம்

DIN

ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாா்பில், கிராம ஊராட்சி உறுப்பினா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கிய பயிற்சி முகாமிற்கு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே. சுவாமிநாதன் தலைமையில் த. நலதேவன் முன்னிலை வகித்து பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்தாா். இதில், கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வாா்டு உறுப்பினா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், ஊராட்சி அமைப்புகளில் வரலாறு மற்றும் 73-ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்ட பிரிவு மற்றும் நெறிமுறைகள், கிராம ஊராட்சி தலைவரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், கிராம வாா்டு உறுப்பினா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்றுனா்களாக ரவிச்சந்திரன், சைவராசு, சுந்தரபாண்டியன், உமாவதி, வெள்ளையம்மாள் ஆகியோா் கலந்துகொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT