பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கரோனோ முன் தடுப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன் தலைமைவகித்தாா். மருத்துவா் அருண்குமாா் தலைமையிலான மருத்துவக்குழுவினா் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை அளவீடு, ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்து மருந்து மற்றும் ஆலோசனை வழங்கினா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஊராட்சி உறுப்பினா்கள் சதீஸ்குமாா், அழகப்பன், தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.