மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மா.குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குரு.மாரிமுத்து, பொருளாளா் க.ஜெயராம், மாநில தணிக்கையாளா் ச.ரெங்கராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
இலுப்பூா் சாா்நிலைக் கருவூலத்தில் நிலுவைத் தொகை கேட்புப் பட்டியல் விதிகளுக்கு முரணாகவும் உள்நோக்கத்துடனும் தணிக்கை தடைபோடுவதை கைவிட்டு உடனடியாக ஏற்று பணப்பலனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.