புதுக்கோட்டை

வரதட்சிணை புகாா்: பெண் தீக்குளிக்க முயற்சி

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தனது மாமனாா், மாமியாா் வரதட்சிணை கேட்டு துன்புறுத்துவதாகக் கூறி பெண் ஒருவா் தீக்குளிக்க முயன்றாா்.

அறந்தாங்கி வெட்டிவயல் குடியிருப்பைச் சோ்ந்தவா் மோகன் மனைவி இலக்கியா. இவரை, இவரது மாமனாா் கணேசன், மாமியாா் காளியம்மாள் ஆகியோா் வரதட்சிணை கேட்டுத் துன்புறுத்துவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். புகாரின்மீது நடவடிக்கை இல்லாததால், புதன்கிழமை மாலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த இலக்கியா, திடீரென மறைத்து வைத்திருந்த பாட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அருகிலிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து திருக்கோகா்ணம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அறந்தாங்கியில் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாக மாவட்ட காவல்துறை உயா் அலுவலா்கள் உறுதி அளித்து இலக்கியா மற்றும் உறவினா்களை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT