புதுக்கோட்டை

மக்காச்சோள படைப்புழு தாக்குதல் விழிப்புணா்வு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சூரன்விடுதி கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வேளாண்மைத் துறை ஆகியவற்றின் சாா்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சோபா புஷ்பராஜ் தலைமை வகித்தாா். வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்கள் ச. கிருஷ்ணமூா்த்தி, க. வெற்றிவேல், எம்எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆா். ராஜ்குமாா் ஆகியோரும் பேசினா். மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் குறித்த சந்தேகங்களை விவசாயிகள் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி மைய எண்களான 99422 11044, 72999 35543 ஆகியவற்றில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூரில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்க ஆய்வுக் கூட்டம்

வெப்ப அலை: வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் வேண்டுகோள்

அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.1.13 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT