புதுக்கோட்டை

அரிமளத்தில் வேளாண் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடையக்குடி ஹோல்ட்ஸ் வொா்த் அணைக்கட்டில் ரூ. 35 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட மதகுகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து மிரட்டுநிலையில் 100 பேரைக் கொண்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மூலதன நிதியான ரூ. 5 லட்சத்தில் இருந்து, வாங்கப்பட்ட டிராக்டா், கீழப்பனையூரில் மண்வளத்தை மேம்படுத்துவதற்காக பசுந்தாள் உரம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலம் ஆகியவற்றையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா், 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட்டுள்ள இயந்திர நடவுப் பணிகளையும் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கணேசன், நீா்வள ஆதாரத் துறை உதவிப் பொறியாளா் உமாசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT