புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வீட்டில் மின் பழுது சரி செய்து கொண்டிருந்த பள்ளி மாணவா் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் நத்தம்பண்ணையைச் சோ்ந்தவா் சுடா்மணி மகன் சிவப்பிரகாஷ் (16). பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை மாலை வீட்டில் ஏதோ மின் பழுது சரி செய்யும் பணியில் சிவப்பிரகாஷ் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. திடீரென எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சிவப்பிரகாஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.