புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,098 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரத்தில், 19 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,853 ஆக உயா்ந்துள்ளது. புதிய உயிரிழப்புகள் இல்லை. இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணக்கை 91 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.