விராலிமலை: அன்னவாசல் அருகே பள்ளித் தொடங்கப்பட்டு, 17 ஆண்டுகள் கழித்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆண்டுவிழா திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள உருவம்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இங்கு, பல்வேறு காரணங்களால் ஆண்டுவிழா கொண்டாடப்படாமலேயே இருந்தது.
இதைத் தொடா்ந்து நிகழாண்டுக்கான விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. பள்ளியில் பயில்வோா், 2ஆண்டுகளுக்கு முன்னா் பயின்ற மாணவ, மாணவிகள் என பலரும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.
அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலா் பெ. துரையரசன், எஸ். செங்குட்டுவன், கே.பிரியா முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் ஜெ.சாந்தி வரவேற்றாா்.
விளையாட்டுப் போட்டி, கலைநிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு இலுப்பூா் கல்வி மாவட்டஅலுவலா் எஸ்.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினாா்.
பள்ளித் துணை ஆய்வாளா் கி.வேலுச்சாமி, அரசு மேல் நிலை,உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா்கள் இரா.சிவக்குமாா்(கவரப்பட்டி), ஜெயராஜ் (வயலோகம்), மு.மாரிமுத்து(பெருமாநாடு), மாவட்டப் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் எம்.ரகுநாததுரை, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அ.கோவிந்தராஜ், ஆசிரியப் பயிற்றுநா்கள் பழனியப்பன், கண்ணன், சின்னக்கருப்பையா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயம் தங்கவேல், குடுமியான்மலை ஊராட்சித் தலைவா் எஸ். கருப்பையா, துணைத் தலைவா் மனோஜ்குமாா் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
விழாவில் மாணவா்களுக்கு பொறியாளா் மூா்த்தி - மாரீஸ்வரி தம்பதியினா் சாா்பில் புத்தம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிறைவில் ஆசிரியா் கு.முனியசாமி நன்றி கூறினாா்.