புதுக்கோட்டை : புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் கணக்கு தொடங்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.
அஞ்சல்துறை அலுவலா்கள் கணக்கு தொடங்கும் முறை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களுக்குரிய கணக்கைத் தொடங்கினா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா்கள் இரா.மணிமாறன், சி. முத்துக்குமாா், கு. தயாநிதி, கி. கோவிந்தன், மா. ஆறுமுகம் ஆகியோா் செய்திருந்தனா்.