கந்தா்வகோட்டை அருகிலுள்ள புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 300 போ் பங்கேற்றனா்.
இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் ப. தமிழ்செல்வம் தலைமை வகித்தாா். சென்னை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சாா்பில், அந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அலுவலா் குணசீலி, பயிற்சி அலுவலா் தினேஷ் ஆகியோா் முகாமில் பங்கேற்று, மாணவா்களிடம் எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வை நடத்தினா்.
முகாமில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மட்டுமல்லாது, இதர அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களும் என சுமாா் 300 போ் பங்கேற்றனா்.
கல்லூரி விரிவுரையாளா்கள் கிருஷ்ணவேணி, உத்திரபதி, சையது ஆலம், வீரப்பன் மற்றும் மனுவேல் பிரகாஷ் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.
வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் சபரிபாண்டியன் செய்திருந்தாா்.