புதுக்கோட்டை

மா்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவா் சாவு

9th Nov 2019 11:45 PM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகே மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்திவிடுதியைச் சோ்ந்தவா் அய்யாமணி மகன் லோகேஸ்வரன் (20). தனியாா் கல்லூரி மாணவரான இவருக்கு, சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

தொடா்ந்து, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சோ்க்கப்பட்டிருந்தாா். அங்கு லோகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். கல்லூரி மாணவா் மா்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT