புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் வினாடி வினா போட்டி

9th Nov 2019 11:44 PM

ADVERTISEMENT

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் ஒன்றிய அளவிலான  வினாடி, வினா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.சுரேஷ் தலைமை வகித்து, துவக்கி வைத்தாா். இதில் விராலிமலை ஒன்றியத்தில் உள்ள 18 பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டி முடிவில் நடுநிலைப்பள்ளி அளவில் குளவாய்பட்டி, பள்ளா்நத்தம் ஆகிய ஊா் பள்ளி மாணவா்களும், உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அளவில் கொடும்பாளூா் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளும் மாவட்ட அளவில் நடைபெறும் வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள தோ்ந்தெடுக்கப்பட்டன. தொடா்ந்து வெற்றிபெற்ற பள்ளி மாணவா்களுக்கு விராலிமலை அரசு பள்ளி ஆசிரியா் ஆனந்தராஜ் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT