பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 7 டிப்பர் லாரிகள் செவ்வாய்க்கிழமை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சித்தூர் வெள்ளாற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அன்னவாசல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சித்தூர் வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த 7 டிப்பர் லாரிகளைப் பறிமுதல் செய்து காரையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.