புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான பணிப் பயிற்சி அண்மையில்(ஏப். 29) நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு, கல்லூரியின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முகாமில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் புலத் தலைவர் எம். செல்வம் கலந்து கொண்டு ஆசிரியர்களின் பணி குறித்தும், கல்லூரித் தர மதிப்பீட்டுக் குழுவின் புதிய வழிமுறைகளை ஈடு செய்வது குறித்தும் விளக்கிப் பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜ. பரசுராமன் செய்திருந்தார்.