இடைத்தேர்தல் முடிவுகளை  எதிர்நோக்கியுள்ளோம்

இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்றார் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும்,

இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்றார் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.
புதுக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவர் அளித்த பேட்டி:
அரசு தலைமை கொறடா மூலம் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவைத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தற்போது உள்ள அதிமுக அரசின் சந்தேகத்தைக் காட்டுகிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக மக்களுக்கு இந்த நடவடிக்கை வெளிச்சத்துக்கு வரும். தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். வரக்கூடிய தேர்தலில் அதிமுக வாக்கு வங்கி சரிவைச் சந்திக்கும் என்றால், அதற்கு அவர்கள் வைத்துள்ள பாஜக, தேமுதிக, பாமக ஆகியவற்றுடன் ஏற்பட்ட கூட்டணியே காரணம். சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அப்போது உள்ள சூழலுக்கு ஏற்ப நான் முடிவெடுப்பேன். நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு நான் யாருக்கு ஆதரவு கொடுத்தாலும் எனக்கு அது பிரச்சனையாகத் தான் முடியும். எனவே தேர்தலில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கான திட்டம் நிறைவேற்றும் கட்சிக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிப்போம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com