புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி மற்றும் பொன்னமராவதி அண்ணா சாலையில் உள்ள ஆதிகாலத்து அலங்கார மாளிகைகளில் ஆடி சிறப்பு விற்பனையையொட்டி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆடி சிறப்புத் தள்ளுபடியாக வாடிக்கையாளர்கள் வாங்கும் அபர்னா பட்டு மல்டி செக்குடு, ரிச் பல்லூ பட்டுச் சேலை, ஹம்சவர்த்தினி பட்டுச் சேலை, சிந்தடிக் காட்டன் சேலை, பிராக், ஹெவி சனாவொர்க் சேலை, கேர்ள்ஸ் டாப்ஸ்,கேர்ள்ஸ் சுடிதார், பட்டுப் பாவாடை செட், ஆண்களுக்கான பாய்ஸ் சர்ட், டிராயர் சர்ட், சர்ட் பிட், ரேமன்ட் சூட்டிங், ஜென்ஸ் பனியன், பேன்ட், கேஷுவல் சர்ட் , பார்மல் சர்ட், பிராண்டட் டிசர்ட் ஆகியவை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை நான்கு தளங்களைக் கொண்டு எஸ்கலேட்டர் வசதியுடன் செயல்படுகிறது. ஆடித் தள்ளுபடி விற்பனை குறித்து இதன் நிர்வாக இணை இயக்குநர் அருண் கூறியது:
ஆதிகாலத்தில் எல்லா நாட்களுமே விழா நாட்கள்தான். தரமும் தள்ளுபடியும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் ஆதிகாலத்தில் இந்த ஆடியை ஒரு பெரிய விழாவாகக் கொண்டாடுகின்றனர். தற்போது ஆடித் தள்ளுபடி விற்பனைக்காக இரு பாலருக்குமான-அவர்களின் எண்ணத்துக்கேற்ப புதிய ரக ஆடைகள் சிறுவர், சிறுமியருக்கான ஆடைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சிறப்புத் தள்ளுபடியாக ஐந்து சதவிகிதம் முதல் ஐம்பது சதவிகிதம் வரை வழங்கப்படுகிறது. மேலும் ரூ. ஆயிரத்துக்கும் மேல் வாங்கும் ஜவுளிகள் வாங்குவோருக்கு பிளாஸ்டிக் கன்டைனர் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சலுகை வரும் ஆகஸ்ட்17 வரை மட்டும் என்றார் அவர்.